உள்ளூர் செய்திகள்

நெமிலி, காவேரிப்பாக்கத்தில் மாண்டஸ் புயல் சேத பகுதிகளை அமைச்சர் காந்தி ஆய்வு

Published On 2022-12-13 09:28 GMT   |   Update On 2022-12-13 09:28 GMT
  • விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி
  • ஏராளமானேர் கலந்து கொண்டனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

மேலபுலம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மேலபுலம் - சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டார்.

மேலபுலம் அரசினர் நடுநிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கீழ்வீதி ஊராட்சியில் மழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News