உள்ளூர் செய்திகள்
பைக் மீது லாரி மோதி தொழிலாளி சாவு
- வேலைக்கு சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 42). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று வீட்டிலிருந்து மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார். பெல் பைபாஸ் மலைமேடு ரெயில்வே பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மொப்ட் மீது மோதி யது.
இதில் படுகாயம் அடைந்த ரஜினியை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர்.
ஆனால் வழியிலேயே ரஜினி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.