உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு

Published On 2022-07-30 09:08 GMT   |   Update On 2022-07-30 09:08 GMT
  • 2 நிறுவனங்கள் மீது வழக்கு
  • 18 நிறுவனங்களுக்கு அபராதம்

ராணிப்பேட்டை:

வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருசட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் முறையான எந்த அறிவிப்பும் இல்லாமல் விற்பனை செய்வதாக புகார்கள் பெறப்பட்டது. அதன்பேரிலும், இரும்பு வியாபாரம் மற்றும் வேஸ்ட் பேப்பர் வியாபாரம் ஆகிய கடைகளில் பயன்படுத்தப்படும் தராசுகள் குறித்தும் பல்வேறு நிறுவனங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டது.

அதில் 18 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது இணக்க கட்டண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் காப்பகம் வசதி, குறைந்தபட்ச ஊதியம், மகப்பேறு விடுப்பு, கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அமருவதற்கான வசதி ஏற்படுத்தி தருதல் ஆகிய விதிகளை பின்பற்றாத உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்கள் ஆகிய 74 நிறுவனங்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 7 நிறுவனங்கள் மீது கேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2 நிறுவனங்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டு தொழிலாளர் துறை அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலச்சட்டங்களை பின்பற்றாத நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News