உள்ளூர் செய்திகள்

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.

அரக்கோணத்தில் கார்கில் தினம் அனுசரிப்பு

Published On 2022-07-27 10:50 GMT   |   Update On 2022-07-27 10:50 GMT
  • கலெக்டர் மலர் வளையம் வைத்து அஞ்சலி
  • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த காவனூர் ஊராட்சியில் உள்ள அம்பாரி வித்யாமந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையர் லதா, வருவாய், மின்வாரிய அலுவலர்கள் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News