உள்ளூர் செய்திகள்
காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்றார்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள ஞானாம்பிகை காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அப்போது நீதியரசர்கள் கிருபாகரன், பாரதிதாசன், ஆலய நிர்வாகி சுதாகர், சத்தியநாராயணன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர். பக்தர்கள் ஏராளமானோர் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.