உள்ளூர் செய்திகள்

ஆற்காட்டில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு

Published On 2022-09-03 15:22 IST   |   Update On 2022-09-03 15:22:00 IST
  • அதிகாரிகள் எச்சரிக்கை
  • சாலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக காணப்படுகிறது

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் பிளாஸ்டிக் கழிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் அகற்றி உலக சாதனையில் இடம் பிடித்தது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தை முன்மாதிரியாக கொண்டு பல மாவட்டங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் தீவிரம் காட்டினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மீண்டும் தொடர்ந்து பயன்ப டுத்தினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனால் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது குறைந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதிலும், பிளாஸ் டிக் கவர்களை பயன்படுத்துவதிலும் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டல்கள், டீக்கடைகள, மளிகைக் கடை களில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் மீண்டும் தெருக்களிலும், சாலைகளிலும் பிளாஸ் டிக் கழிவுகள் அதிகமாக காணப்படுகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News