உள்ளூர் செய்திகள்

சோளிங்கரில் ஆட்டோ டிரைவர் மகள் 492 மதிப்பெண் பெற்று சாதனை

Published On 2022-06-21 11:25 GMT   |   Update On 2022-06-21 11:25 GMT
  • ராணிபேட்டை மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்தார்.
  • மாணவிக்கு பாராட்டு குவிந்தது.

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வார்டு போலீஸ் லைன் பகுதியை ஆட்டோ ஓட்டுனர் யுவராஜ் மகள் சர்மிலி பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கள் 500-க்கு 492 மதிப்பெண் பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் இடமும் சோளிங்கரில் முதலிடமும் பெற்றது.

இதனை ஒட்டி இந்த மாணவியை பாராட்டும் விதமாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஏஎல் சாமி, 9 வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன் சார்பில் மாணவி சர்மிலியை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மாணவிக்கு பொண்ணாடை போர்த்தி பரிசு பொருள் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்கள்.

Tags:    

Similar News