உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் முகாம்

Published On 2022-11-02 14:52 IST   |   Update On 2022-11-02 14:52:00 IST
  • அடையாள அட்டைகள் வினியோகம்
  • கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

நெமிலி:

நெமிலியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம், நெமிலி அரசினர் ஆண்கள் மேநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மருத்துவர்கள் உரிய பரிசோதனை செய்து அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். மாற்றுத்திறனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நெமிலி ஒன்றிய குழுத்தலைவர் வடிவேலு, நெமிலி பேரூரட்சி மன்றத் தலைவர் ரேணுகாதேவி சரவணன் ஆகியோர் வழங்கினர்.

Similar News