உள்ளூர் செய்திகள்

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

Published On 2023-03-18 08:42 GMT   |   Update On 2023-03-18 08:42 GMT
  • பட்டா வழங்காததை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், சிறுவளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான இடம் உளியநல்லூர் கிராமத்தில் உள்ளதாகவும், அந்த இடத் தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்ட இருப்ப தால் அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருவாய்துறையினருக்கு கடந்த சில மாதங்களாக கோரிக்கை வைத்துவந்தனர்.

இந்நிலையில் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் வருவாய் துறையினரை கண்டித்து பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் சுபாஷ், ராஜமாணிக்கம், சுப்பிரமணி, மணி, ஆதிமூலம், தினகரன், ரவிச்சந்திரன், கிருஷ்ணன், தேவராஜ், நரசிம்மன், சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News