உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் விவசாயி காயம்

Published On 2022-10-17 10:11 GMT   |   Update On 2022-10-17 10:11 GMT
  • தனியார் பஸ் மீது பைக் மோதியது
  • போலீசார் விசாரணை

கலவை:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வேம்பி கிரா மத்தை சேர்ந்தவர் லோகநாதன் ( வயது 45 ) , ஆதி மூலம் மகன் அருண் . விவசாயி . இவர்கள் இருவரும் கலவையில் இருந்து வேம்பிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர் . கலவையை அடுத்த அருந்ததிபாளையம் அருகே சென்றபோது லோகநாதன் ஓட்டிச் சென்ற பைக் தனியார் பஸ் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப் பட்டனர் . அவர்களில் அருணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை கலவை அரசு மருத்துவமனையில் சேர்த்து , மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுகுறித்து கலவை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News