உள்ளூர் செய்திகள்

வாலாஜா அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2023-03-27 15:07 IST   |   Update On 2023-03-27 15:07:00 IST
  • நெல் விதைத்தபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ராணிபேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 58) விவசாயி.இவர் விவசாய நிலங்களில் விதை நெல்லை விதைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

ஞானராஜ் நேற்று மதியம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தனது மகனுடன் விதை நெல்லை விதைத்து கொண்டிருந்தார்.

அப்போது, நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மின்மோட்டாருக்காக மின்சாரம் கொண்டு செல்ல அமைக்கப்பட்டு இருந்த சேதமடைந்த மின்ஒயரில் எதிர்பாராதவிதமாக ஞானராஜ் தவறி விழுந்துள்ளார்.

இதனால் மின்சாரம் பாய்ந்து ஞானராஜ் கீழே விழுந்தார். அவரது மகன் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஞானராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News