உள்ளூர் செய்திகள்
கோவில்கள் பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 25 ்கோவில்களில் கோவில் பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்குராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பித்த விவரத்தினை வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 0416-2977432- என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.