உள்ளூர் செய்திகள்

கலெக்டர் வளர்மதி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க வசதி

Published On 2023-10-18 14:02 IST   |   Update On 2023-10-18 14:02:00 IST
  • இந்திய ஜனநாயகம் தழைக்க ஒத்துழைக்க வேண்டும்
  • கலெக்டர் பேச்சு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிக ளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 342 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

முகாமிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் 221 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைக்கு ரூ.8,500 மதிப்பிலான சக்கர நாற்காலியும் வழங்கினார்.

முகாமில் 183 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 73 நபர்களுக்கு முதல மைச்சரின் காப்பீட்டு அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

மாதாந்திர உதவித் தொகை வேண்டி 53 மாற்றுத்திறனாளிகளும், வங்கிக் கடனுதவி வேண்டி 69 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 29 பேரும் கோரிக்கை மனுக்களை வழங்கி னார்கள்.

முகாமில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி எந்த வாக்காளரும் விடுப டக்கூடாது என்ற அடிப்படையில் மாற்றுத்திற னாளிகள் எளிதாக தேர்தலில் வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தரும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வண்ணம் அனைத்து வாக்குச்சா வடிகளிலும் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்ப டுத்தப்படும் அனைவரும் தவறாமல் வாக்களித்து, இந்திய ஜனநாயகம் தழைக்க ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News