உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2023-08-25 15:29 IST   |   Update On 2023-08-25 15:29:00 IST
  • தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி திடீர் ஆய்வு
  • ரூ.15 ஆயிரம் அபராதம்

அரக்கோணம்:

அரக்கோணம் பஜார், காந்தி ரோடு, பழைய பஸ் நிலையம் மற்றும் சுவால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பெட் டிக்கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட் டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் கப், கேரி பேக் உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்திருந்த 2 குடோன்களில் இருந்து சுமார் 500 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரம் அபரா தம் விதித்தார்.

ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ரகுராமன், என் ஜினீயர் செல்வகுமார், சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News