உள்ளூர் செய்திகள்

200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

Published On 2023-10-17 07:06 GMT   |   Update On 2023-10-17 07:06 GMT
  • அமைச்சர் ஆர்.காந்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்
  • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி,அங்கன்வாடி பணியாளர்கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து குறித்த உணவு கண்காட்சி அரங்கை பார்வையிட்டு, 200 கர்ப்பிணிகளுக்கு தனது சொந்த செலவில் சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத்,ஹரிணி தில்லை, முகமது அமீன், ஒன்றிய குழு தலைவர்கள் சேஷா வெங்கட், புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா,ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News