உள்ளூர் செய்திகள்

பன்னியூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை

Published On 2023-06-15 14:47 IST   |   Update On 2023-06-15 14:47:00 IST
  • ரூ.9 லட்சத்தில் அமைகிறது
  • பூமிபூஜை போடப்பட்டது

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பன்னியூர் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பன்னியூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் முன்னிலை வகித்தார்.

சாலையை மேம்படுத்தி தர வேண்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி நேற்று பூமிபூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News