உள்ளூர் செய்திகள்

போதை பொருள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2022-12-17 14:41 IST   |   Update On 2022-12-17 14:41:00 IST
  • போலீசார் துண்டு பிரசுரம் வழங்கினர்
  • போதை பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத் யன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி சோளிங்கர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட் களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

Tags:    

Similar News