உள்ளூர் செய்திகள்
உறுதிமொழி எடுத்து கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள்.
அரசு பள்ளியில் ேபாதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு
- உறுதி மொழி ஏற்றனர்
- 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியல் ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தண்டபாணி தலைமை தாங்கினார். அரக்கோணம் தாசில்தார்பழனி ராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில்அன்பு பாலம் மூலமாக சமுதாயத்தின் அடுத்த தலைமுறை காப்போம் என்ற உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.
ரோட்டரி சங்கத் தலைவர் கே சதீஷ்குமார், ஆர்பி. ராஜா, யூத் சர்வீஸ் இயக்குனர் கஜபதி, பள்ளி ஆசிரியர்கள் ஆர்.மணி, தேசிங்கு, அசோகன், என பலர் கலந்து கொண்டனர்.