லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான காட்சி.
லாரி மீது ஆட்டோ மோதி தொழிலாளி பலி
- 9 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
திருவள்ளுர் மாவட்டம் ஆர் கே பேட்டையில் இருந்து ஆட்டோவில் இன்று காலை 10 பேரை ஏற்றிக்கொண்டு வேலைக்காக சோளிங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை கர்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.
சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி திரவுபதி அம்மன் கோவில் அருகே ஆட்டோ வந்து கொண்டி ருந்தது. அப்போது அங்கு டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
இதில் திருவள்ளூர் மாவட்டம் நெச்சிலி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 48) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேண்டா( 21), தீபா (20), நந்தினி (30) , முருகேஷ், வள்ளியம்மா , உடையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோபி (35), நாராயண குப்பத்தைச் சேர்ந்த சுமதி (35), ஆர்.கே. பேட்டையை சேர்ந்த கர்ணன் (40) ஆட்டோ டிரைவர், உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் படுகாயம் அடைந்த வர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 8 பேரைஅ டுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேணுகோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.