உள்ளூர் செய்திகள்
- பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த விவாதிக்கப்பட்டது
- தொண்டர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த நேரத்தில் முடித்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது என்பதை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி. ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ, வி.கே.ஆர்.சீனிவாசன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.