சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 110 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- தொழிலாளர் உதவி கமிஷனர் தகவல்
- 110 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன
ராணிப்பேட்டை:
சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும் கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி, வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி அறிவுரையின்படியும், வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய விடுமுறை தினமான (சுதந்திர தின விழா) நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக் கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
160 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில் கடைகள் மற் றும் நிறுவனங்களில் 55 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 51முரண்பாடுகளும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் என்று மொத்தம் 110 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. அந்த அபராதம் விதித்து நிறுவனங்களின் மீது இணக்க கட்டண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு அரசு ஒப்பந்த பணிகளில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் பணிய மர்த்தப்படவில்லை என்று ஒப்பந்ததாரர்களிடம் சுயசான்று பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை வேலூர் தொழிலாளர் உதவிகமிஷனர் (அமலாக்கம்) தே.ஞானவேல் தெரிவித்துள்ளார்.