உள்ளூர் செய்திகள்

ஆசிட் தொட்டியில் இறங்கிய தொழிலாளியின் கால்கள் கருகியது

Published On 2023-03-31 14:58 IST   |   Update On 2023-03-31 14:58:00 IST
  • வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே உள்ள மலைமேடு எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோவில் தெருவை ேசர்ந்தவர் குமார் (52). இவர் பெல் ஆன்சிலரி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.நேற்று கம்பெனியில் ஜாப் ஒர்க்குக்கு தேவைப்படும் பைப்புகள் வாங்கு வதற்கு சிப்காட் பேஸ் 3ல் உள்ள மெட்டல் கம்பெனிக்கு சென்றார்.

அங்கு வாங்கிய 4 பைப்களை டிராக்டரில் ஏற்றிவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக சென்றவர், அங்குள்ள ஆசிட் தொட்டியில் இறங்கியதாக கூறப்படுகிறது.இதனால் அவரது 2 கால்ககளும் முழங் கால் வரை கருகியது.

அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குயில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News