பஸ்சில் பயணிகளிடம் நகைகள் திருடிய வாலிபர்
- 11 பவுன் எடை கொண்டது
- ஜெயிலில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த டோல்கேட் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் -இன்ஸ்பெக்டர்கள் மகாராஜன், சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பா ற்கடல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 34) என்பது தெரியவந்தது.
மேலும் கடந்த ஜூன் 12-ந் தேதி குடியாத்தம் அடுத்த மேல் பட்டியை சேர்ந்த சேகர் என்பவர் பஸ்சில் பயணம் செய்த போது அவரிடம் இருந்து 11 பவுன் எடை கொண்ட 43 தங்கத் தாலிகளை திருடியது தெரிந்தது.
ேமலும் உள்பட வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பஸ்ஸில் பயணம் செய்த பல்வேறு பயணிகளிடம் நகைகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுடார்.
இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் பாலமுருகனை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.