உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை, வாலாஜா சாலையில் லாரி மோதி பிளஸ்-2 மாணவன் பலி

Published On 2023-03-04 15:32 IST   |   Update On 2023-03-04 15:32:00 IST
  • தங்கை லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்
  • போலீசார் விசாரணை

ராணிபேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா காமராஜ் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்.இவரது மகன் சஞ்சய் (வயது 16). இவரும் இவரது தங்கை நிரஞ்சனா (14) ஆகிய இருவரும் அம்மூர் லாலாப்பேட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சஞ்சய் தனது தங்கை நிரஞ்சனாவை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சஞ்சய் லாரி சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது தங்கை நிரஞ்சனா தலையில் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

இது குறித்து தகவல் அறந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறிய காயங்களுடன் நிரஞ்சனாவை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News