உள்ளூர் செய்திகள்

நாய் கடித்து 4 பேர் காயம்

Published On 2022-10-31 15:44 IST   |   Update On 2022-10-31 15:44:00 IST
  • ஆஸ்பத்திரியில் அனுமதி
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சோளிங்கர்:

ராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும், ஒவ் வொரு தெருவிலும் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. தெருக்களில் விளையாடிக்கொண்டிருக் கும் குழந்தைகள், நடந்து செல்பவர்களை நாய்கள் கடிப்பது வழக்கமாக உள்ளது.

மேலும் நாய்களால் அடிக்கடி விபத்துகளும் நடைபெறு கிறது. இந்த நிலையில் தென் வன்னியர் வீதியில் இரண்டு வயது குழந்தை காவ்யா, லிங்கரெட்டி தெருவில் சுந்தர வல்லி (வயது 70), திலகவதி (60), ராமச்சந்திரன் (70) ஆகிய 4 பேரை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது.

இதில் காயம் மடைந்த அனைவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனைமில் சிகிச்சை பெற்றனர். இதே போல அடிக்கடி வெறிநாய் கடிப்பது வழக்கமாக உள்ளது. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என பலமுறை நக ராட்சி நிர்வாகத்தில் வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன் ஏற்கனவே ஒரே நாய் 42 பேரை கடித்தது குறிப் பிடத்தக்கது.

Tags:    

Similar News