உள்ளூர் செய்திகள்

மனைவி இறந்த 4 நாளில் வாலிபர் தூக்கிட்டு சாவு

Published On 2023-06-19 09:40 GMT   |   Update On 2023-06-19 09:40 GMT
  • 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் வாணாபாடி ரோடு, வசந்தம் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சங்கர் (வயது 37). இவரது மனைவி ஆதிலட்சுமி (30).

ஆந்திர மாநிலம், காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி, மாற்றுத்திறனாளி சங்கரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவ்வப்போது ஏற்பட்ட குடும்ப தகராறினால் மனமுடைந்த ஆதிலட்சுமி கடந்த 14-ந் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாடு கட்டும் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி இறந்து போன துக்கம் மற்றும் மன உளைச்சலில் இருந்த சங்கர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News