உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 300 போலீசார் பாதுகாப்பு

Published On 2023-02-01 10:12 GMT   |   Update On 2023-02-01 10:12 GMT
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையையொட்டி தீவிரம்
  • ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது

அரக்கோணம்:

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ரெயில் மூலம் வரு கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்குப்பட்ட பகுதிகளில் உள்ளரெயில் தண்டவாளம் மற்றும் ரெயில் நிலையங்களில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டுயாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சலோமோன் ராஜா, தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், தாசன் மற்றும் சுமார் 300 போலீசார் துப்பாக் கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.

Tags:    

Similar News