உள்ளூர் செய்திகள்

பைக் திருடிய 3 பேர் கைது

Published On 2023-08-10 08:43 GMT   |   Update On 2023-08-10 08:44 GMT
  • ரோந்து பணியில் சிக்கினர்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த நாமக்குளம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (22).

இவர் கடந்த 7-ந் தேதி தனது பைக் தனது சித்தப்பா வீட்டிற்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.

இது தொடர்பாக பத்மநாபன் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சிப்காட் போலீசார் சீக்கராஜபுரம் செக்போஸ்ட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த சிம்பு ( எ)குல்லா (20), சரத் (எ)தூள் (21), கவியரசன் (19)ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது பத்மநாபனின் பைக்கை திருடி வந்திருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News