உள்ளூர் செய்திகள்

வேன் கவிழ்ந்து 25 பேர் காயம்

Published On 2022-10-11 15:04 IST   |   Update On 2022-10-11 15:04:00 IST
  • தனியார் நிறுவனத்திற்கு வேலை ஆட்களை ஏற்றி சென்ற போது விபத்து
  • டிரைவர் தப்பி ஓட்டம்

அரக்கோணம்:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில்.நேற்று மாலை கம்பெனியில் இருந்து வேலை முடிந்து சுமார் 30 பேர் கம்பெனி வேனில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனர். வளர்புரம்- கிருஷ்ணாபுரம் ரோட்டில் வந்தபோது திடீரென டிரைவர் கட்டுபாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 25 பேர் காயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய வேன் டிரைவர் விஜியை (வயது 30) தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News