உள்ளூர் செய்திகள்

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு குறித்த ஒத்திகை நடந்த போது எடுத்த படம்.

வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் 230 கொரோனா படுக்கைகள் தயார்

Published On 2022-12-28 15:29 IST   |   Update On 2022-12-28 15:29:00 IST
  • நோய் தடுப்பு குறித்து ஒத்திகை நடந்தது
  • அனைத்து வசதிகளும் தயாராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

வாலாஜா:

சீனா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உருமாற்றம் அடைந்த பி.எப்.7 வகையில் உருவாகி அது வேகமாக பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அந்த வகையில் இந்த கொரோனா நெருக்கடி சவாலை சமாளிக்க நோய் தடுப்பு ஒத்திகையானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்து வமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மூலமாக ஏற்படும் நெருக்க டிகளை சமாளிக்கும் வகையில் நோய் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைக்கு வருபவரை செவிலியர்கள் பாதுகாப்பு உடையில் மருத்துவரிடம் அழைத்து செல்லுதல் அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து நோய் தீவிரம் தெரிந்து கொள்ளுதல் இதர பாதிப்புகள் குறித்து அறிந்து கொண்டு அவரை வார்டுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்படி செவிலியர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நோயா ளிகளுக்கு முறையான ஆக்சிஜன் மற்றும் வெண்டி லேட்டர் படுக்கைகள் அல்லது சாதாரண கொரோனா வார்டில் அனுமதிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியானது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

மேலும் ஒத்திகை நிகழ்ச்சி குறித்து மருத்துவ மனை கண்கா ணிப்பாளர் மருத்துவர் உஷாநந்தினி கூறுகையில்:-

மருத்துவமனையில் மொத்தம் 230 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 24 ஐ, சி, யூ படுக்கைகள் 206 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் உபகரணங்கள் வசதியும் உள்ளது.

ஆக்சிஜன் பிளாண்ட், 34 மற்றும் மருத்துவர்கள் 20 பேரும் ஆம்புலன்கள் அனைத்து வசதிகளும் தயாராக உள்ளது மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

Tags:    

Similar News