உள்ளூர் செய்திகள்

பெண்னிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2022-11-10 09:58 GMT   |   Update On 2022-11-10 09:58 GMT
  • பொருட்கள் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து துணிகரம்
  • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை

நெமிலி:

காவேரிப்பாக்கம் அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் அதே பகுதியில் பங்க் கடை நடத்தி வருகிறார்.

அந்த பங்க் கடைக்கு பைக்கில் 2 பேர் வந்தனர். அப்போது மகேஸ்வரியிடம் பொருட்கள் வாங்குவது போல் பேச்சுக் கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை திடீரென பறித்தனர்.

அவர் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மின்னல் வேகத்தில் பைக்கில் 2 மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து மகேஸ்வரி அவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News