உள்ளூர் செய்திகள்

2 நாட்கள் மதுகடைகளுக்கு விடுமுறை

Published On 2023-01-14 10:09 GMT   |   Update On 2023-01-14 10:09 GMT
  • கலெக்டர் தகவல்
  • திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு நடவடிக்கை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மதுபானக் ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16.01.2023 (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம் அன்றும் மற்றும் குடியரசு தினமான 26.01.2023 (வியாழக்கிழமை) அன்றும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கலெக்டர் உத்தரவின்படி மேற்படி இந்நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மற்றும் தனியார் மதுகூடங்கள் இயங்காது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். அன்றைய தினங்களில் மது பார்கள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News