உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

அரக்கோணத்தில் சூதாடிய 2 பேர் சிக்கினர்

Published On 2022-06-17 15:02 IST   |   Update On 2022-06-17 15:02:00 IST
  • சீட்டுகளை காண்பித்து பணம் வசூலித்தனர்.
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் பழனி பேட்டை பகுதிகளில் காட் டன் சூதாட்டம் நடைபெறுவ தாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டவுன் சப்- இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் பழனிபேட்டை டி.என்.நகர், சோமசுந்தரம் நகர், உப்பரபாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழனிபேட்டை பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் காட்டன் சூதாட்ட சீட்டுகளை காண்பித்து சிலரிடம் பணம் வசூலித்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதே போன்று பழனி பேட்டை பிரதான சாலை, புதுபேட்டை ஆகிய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது பழனிபேட்டை அங் காளம்மன் கோவில் அருகே காட்டன் சூதாட்ட சீட்டு களை வைத்து பணம் வசூலித்த பழனிபேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்தனர். 2 பேரிடமும் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News