உள்ளூர் செய்திகள்

லாரி கண்ணாடி உடைத்த 2 பேர் கைது

Published On 2022-10-30 08:15 GMT   |   Update On 2022-10-30 08:15 GMT
  • குடிபோதையில் அட்டகாசம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த குருவராஜ பேட்டையை சேர்ந்தவர் விஜயன். அவரது மகன் குமார் (வயது 30), இவர், அப்பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் அருகே மினி லாரியை நிறுத்தி இருந்தார்.

அப்போது சோகனூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23), தனுஷ் (20), பரத் (18) ஆகி யோர் குடிபோதையில் லாரியின் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ், தனஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News