உள்ளூர் செய்திகள்
- மர்ம கும்பல் தீ வைத்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த நந்திவேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த நெற்ப யிரை நேற்று முன்தினம் அறு வடை செய்து சுமார் 20 நெல் மூட்டைகளை நிலத்திலேயே வைத்துள்ளார்.
இந்தநிலை யில் சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் சிலர் அந்த பகுதியில் இருந்த காய்ந்த செடிகளுக்கு தீவைத் ததாக கூறப்படுகிறது. அப் போது தீ மளமளவென எரிந்து நெல் மூட்டைக்கு பரவி அடுக்கி வைத்து இருந்த 12 மூட்டைகள் எரிந்து நாச மானது.
இது குறித்து அரக் கோணம் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.