உள்ளூர் செய்திகள்

நெமிலி, காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் பயனாளிகள் தேர்வு

Published On 2022-06-29 12:19 GMT   |   Update On 2022-06-29 12:19 GMT
  • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் நாளை திறப்பு.
  • 2600 பேர் பயனடைய உள்ளனர்.

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பதற்கு நாளை வருகை தரும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இதில் காவேரிப்பாக்கம் மற்றும் நெமிலி ஒன்றியத்தில் 2600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் நலத்திட்ட உதவிகளை பெறுவார்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, தையல் எந்திரம் வழங்குதல், முதியோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குதல், தையல் மெஷின், ஊனமுற்றோர் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வழங்க உள்ளார்.

இதற்காக 2600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நாளை முதல் அமைச்சர் நேரில் சந்தித்து பயனடைய உள்ளனர். ஏற்பாடுகளை காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து நிகழ்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags:    

Similar News