உள்ளூர் செய்திகள்

விளையாட சென்ற பள்ளி மாணவி ஏரியில் தவறிவிழுந்து பலி

Published On 2023-06-30 15:27 IST   |   Update On 2023-06-30 15:27:00 IST
  • மற்றொரு மாணவி உயிருடன் மீட்பு
  • இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட் டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மோனிகா (வயது 14). வள்ளுவம்பாக்கம் அரசு உயர் நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலை யில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் வசிக்கும் அவரது தோழியான, குப்பன் என்பவரின் மகள் செல்வராணி (9) என்பவரோடு அருகில் உள்ள ஏரியில் விளையாட சென்றுள்ளார்

அங்கு விளையாடிகொண் டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில்

மூழ்கி தத்தளித்து கொண்டி ருந்தனர். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டனர்.

ஆனால் மோனிகா பரிதாப மாக இறந்துவிட்டார். உயி ருக்கு போராடிக்கொண்டி ருந்த செல்வராணி வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். பின்னர் மேல்சிகிச் சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவேரிப்பாக் கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர். இந்த சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News