உள்ளூர் செய்திகள்

இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது

Published On 2023-06-25 09:01 GMT   |   Update On 2023-06-25 09:01 GMT
  • இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வெள்ளமாசி வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா்(வயது32). இவரது வீட்டு முன் 2இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் திடீரென இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்கள், சுந்தருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வீட்டிலிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை அவா் ஆய்வு செய்த போது, மூகமுடி அணிந்து வந்த மா்ம நபா் தீ வைத்து விட்டுச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், நாகாச்சி கிராமத்தை சோ்ந்த ஹரீஸ் (25) வாகனங்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News