உள்ளூர் செய்திகள்

மிளகாய், பருத்தி செடிகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்

Published On 2023-02-08 08:05 GMT   |   Update On 2023-02-08 08:05 GMT
  • மிளகாய், பருத்தி செடிகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
  • வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அபிராமம்

இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்த நிலையில் மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வது? என்ற மனகுழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருகிறது. காட்டு பன்றிகளுக்கு பயந்து இந்த ஆண்டு நிலக்கடலை விவசாயத்தை விவசாயிகள் பயிரிடவில்லை.

காட்டு பன்றிகள் தொல்லை குறித்து வேளாண் மற்றும் வனத்து றையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டு பன்றிகளால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News