உள்ளூர் செய்திகள்

ஆன்மீக சொற்பொழிவு

Published On 2022-09-28 08:11 GMT   |   Update On 2022-09-28 08:11 GMT
  • ராமேசுவரத்தில் வருகிற 1-ந் தேதி ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
  • “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா” அமைப்பின் சார்பில் கிருஷ்ணன் உபதேசம் என்னும் தலைப்பில் நடக்கிறது.

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" அமைப்பின் சார்பில் கிருஷ்ணன் உபதேசம் என்னும் தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.

இதில் நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராமேசு வரத்திற்கு வருகை தர உள்ளனர். இதன் காரணமாக ராமேசுவரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டது. சொற்பொழிவு ஏற்பாடு களை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அக்டோபர் 1 முதல் 5-ந் தேதி வரை ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டது. எனவே மேற்கண்ட நாட்களில் வெளியூர் பக்தர்களுக்கு அறை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News