முன்னாள் அமைச்சர் சார்பில் பரபரப்பு சுவரொட்டி
- ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சார்பில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
- இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்
முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த 24-ந்தேதி எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்வர்ராஜா ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இன்று (17-ந்தேதி) எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு அவர் ஒட்டியுள்ள போஸ்டரில், தலைவா... நம் கட்சித் தலைவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள்.
நாங்கள் கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம். காப்பாற்றுங்கள்... என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.