உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

Published On 2023-01-05 13:25 IST   |   Update On 2023-01-05 13:25:00 IST
  • செய்யது அம்மாள் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.
  • இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா செய்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் அறிவியல் கண்காட்சி கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர். சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்று பேசினார்.

இதில் கல்லூரி அறக்கட்டளையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அவர்களின் அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர். 30க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு படைப்புகள் இதில் இடம் பெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா செய்தார்.

Tags:    

Similar News