உள்ளூர் செய்திகள்

சவுராஷ்டிரா மகளிர் மாநாடு

Published On 2022-11-27 08:32 GMT   |   Update On 2022-11-27 08:32 GMT
  • சவுராஷ்டிரா மகளிர் மாநாடு நடந்தது.
  • சவுராஷ்டிரா பள்ளிகளில் சவுராஷ்டிரா மொழியை வளர்க்க விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும்

பரமக்குடி

பரமக்குடி நகர் எமனேசுவரத்தில் சவுராஷ்டிரா சமூக நலச் சங்கம் சார்பில் சவுராஷ்டிரா மகளிர் மாநாடு நடந்தது. சங்க தலைவர் மாருதி ராமன் தலைமை தாங்கினார். எமனேசுவரம் சவுராஷ்டிரா சபை தலைவர் சேசைய்யன், பரமக்குடி சபை தலைவர் மாதவன், சங்க முன்னாள் தலைவர்கள் ராஜன், யோகையன், முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.

துணைத் தலைவர்கள் கோவிந்தன், கங்காதரன் வரவேற்றனர்.பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு தீர்மானத்தை முன்மொழிந்தார். மதுரை சவுபாக்கியா தொழில் முனைவோர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். இதில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சவுராஷ்டிரா சமூகத்திற்கு மொழி வாரி சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அரசு பணியில் 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

சவுராஷ்டிரா பள்ளிகளில் சவுராஷ்டிரா மொழியை வளர்க்க விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News