உள்ளூர் செய்திகள்

சதக் பாலிடெக்னிக் கல்லூரி: கால்பந்து அணி மாநில போட்டிக்கு தகுதி

Published On 2023-02-22 14:38 IST   |   Update On 2023-02-22 14:38:00 IST
  • கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி கால்பந்து அணி மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.
  • 24, 25 ஆகிய தேதிகளில் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

கீழக்கரை

மதுரை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி விருதுநகரில் நடந்தது. இதில் மண்டல அளவில் 10 கல்லூரிகளை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி ஆட்டத்தில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் அணியும், அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில் பெனால்டி கிக்கில் 3-2 என்ற கோல் கணக்கில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், உடற்கல்வி இயக்குநர் மருதாசல மூர்த்தி மற்றும் பயிற்றுநரை, கல்லூரி சேர்மன் யூசுப் சாகிப், இயக்குநர் ஹமீது இபுராஹிம், முதல்வர் அலாவுதீன், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News