உள்ளூர் செய்திகள்

தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு

Published On 2023-10-13 08:00 GMT   |   Update On 2023-10-13 08:00 GMT
  • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
  • பூஜை ஏற்பாடுகளை வாசு செய்திருந்தார்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள நம்பு ஈஸ்வரர் கோவிலில் குரு வார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கல், அபிஷேக பால் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை வாசு செய்திருந்தார். பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் தொண்டி சிதம்பரேஸ்வர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர் கோவில், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு, நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

Tags:    

Similar News