உள்ளூர் செய்திகள்
- பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
- காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் எம்.எல்.ஏ. நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதீப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ், பரமக்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, கிளைச் செயலாளர் முருகவேல், காளிமுத்து, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.