உள்ளூர் செய்திகள்
தேசிய அளவிலான அலை சறுக்கு போட்டிகள்
- தேசிய அளவிலான அலை சறுக்கு போட்டிகள் நாளை தொடங்குகிறது.
- விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர்கள் பிரப்பன்வலசை கடற்கரையில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்டபம்
தேசிய மற்றும் தமிழ்நாடு அலை சறுக்கு அசோசி ேஷசன் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை கடற்கரையில் தேசிய அளவிலான நீர் சாகச போட்டிகள் நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
இதில் கலந்து கொள்வ தற்காக தமிழகம், கர்நாடகா, ஒடிசா, கேரளா, கோவா, குஜராத், மகா ராஷ்டிராவில் இருந்து 80-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேசிய போட்டிகளில் பதக்கம்வென்ற 18 பேர் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இதில் ஸ்பிரின்ட்ரேஸ் 200 மீட்டர், டெக்னிக்கல் ரேஸ் 2 கி.மீ., டிஸ்டன்ஸ் ரேஸ் 12 கி.மீ. பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்கவுள்ள வீரர்கள் பிரப்பன்வலசை கடற்கரையில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.