உள்ளூர் செய்திகள்

தேசிய கராத்தே போட்டி: வெண்கலம் வென்ற சிறுமிக்கு உற்சாக வரவேற்பு

Published On 2022-12-12 07:19 GMT   |   Update On 2022-12-12 07:19 GMT
  • பரமக்குடியில் தேசிய கராத்தே போட்டி நடந்தது.
  • இதில் வெண்கலம் வென்ற சிறுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த குருநாதன்-கவிதா தம்பதியின் 10 வயது மகள் அனுஸ்ரீ. இவர் கடந்த வாரம் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். அதேபோல் 10 வயது சிறுவன் வசந்த் மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கங்கள் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய இருவருக்கும் ஸ்பார்க் கராத்தே அமைப்பு சார்பில் மாலை, சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்கள் வென்ற சிறுவர்-சிறுமிக்கும், பயிற்சியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News