உள்ளூர் செய்திகள்

வாலிபர் கொலை

Published On 2022-08-03 08:52 GMT   |   Update On 2022-08-03 08:52 GMT
  • சாயல்குடி அருகே வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
  • அவரது உடலில் ரத்தக்காயங்கள் தென்பட்டன.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைகிணறு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே சாயல்குடி ேபாலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நட த்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் உடலில் ரத்தக்காயங்கள் தென்பட்டன. அங்கிருந்த தடயங்களை சேகரித்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் உடலில் காயங்கள் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து ள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News