உள்ளூர் செய்திகள்

சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பசீர் அகமது உறுப்பினர் அடையாள அட்டை வழங்கியபோது எடுத்தபடம்.

நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2023-09-28 07:38 GMT   |   Update On 2023-09-28 07:38 GMT
  • சாயல்குடி அருகே நரிப்பையூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
  • நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சாயல்குடி

சாயல்குடி அருகே நரிப் பையூர் கிராமத்தில் முதுகு ளத்தூர் சட்டமன்றத்தொ குதி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற் றது.

இந்நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கி ணைப்பாளர் பசீர் அகமது தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், தொகுதி செய லாளர் வெங்கடேஷ், ஒன் றியச் செயலாளர் பழனி முருகன், பென்னகரம் ராஜ பாண்டி, ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

நாம் தமிழர் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு கட்சியில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடை யாள அட்டை வழங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் ராஜ பாண்டியன், ஒன்றிய தலை வர் விமல்ராஜ், தொகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் அருள் ராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் சக்திவேல், நரிப்பையூர் சிவா, கிளைச் செயலாளர் அந்தோணி ஜேசுபாலன், கிளைத்தலை வர் சேசு ரமேஷ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News